search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாணவர்"

    டெல்லியில் நடந்து வரும் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். #Chess #Gukesh #Grandmaster
    சென்னை:

    சர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

    கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். குகேசின் தந்தை ரஜினிகாந்த், தாயார் பத்மா ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

    இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து இருக்கும் குகேஷ் அளித்த பேட்டியில், ‘கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய செர்ஜி கர்ஜாகின் சாதனையை தகர்க்க முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார். #Chess #Gukesh #Grandmaster

    செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #YoungestChessGrandMaster #Praggnandhaa
    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனை படைத்தார்.



    பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா நிருபர்களிடம் பேசுகையில், ‘இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எனது முன்மாதிரி. அவருடன் செஸ் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் போன்று வருவது தான் எனது லட்சியமாகும்’ என்று தெரிவித்தார். 
    மத்திய அரசு நடத்திய ‘ஹேக்கத்தான்’ போட்டியில் சென்னையை சேர்ந்த கே.சி.ஜே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
    பிலானி:

    இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றலை உருவாக்கவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2018’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப திறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முதல்கட்ட போட்டிகள் முடிந்த நிலையில், 2-ம் கட்ட இறுதிச்சுற்று போட்டிகள், நாடு முழுவதும் 10 மையங்களில் நடைபெற்றன. ஒவ்வொரு மையத்திலும் பங்கேற்ற மாணவர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

    இதில், ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய மின்னியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.-சிஇஇஆர்ஐ) நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த கே.சி.ஜே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. அவர்கள் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு வாழ்க்கையை எளிதாக்க உதவும் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். அதற்காக அவர்கள் முதல் பரிசு பெற்றனர். பெங்களூரு மாணவர்களுக்கு 2-ம் பரிசு கிடைத்தது. 
    ரஷியாவில் நடந்து வரும் உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    சென்னை:

    உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ விளையாட்டு போட்டி ரஷியாவில் அனப்பா நகரில் நடந்து வருகிறது. இதில் 55 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 80 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப் பிரிவில் சென்னை மாணவர் ஏ.பி.வசீகரன் பங்கேற்றார். இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இதேபோல் 75 கிலோ எடை பிரிவில் அருண் தனுஷ்க் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற வசீகரன் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    நாளை சென்னை திரும்பும் வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    ×